செய்திகள் :

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

post image

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சைபர் குற்றவாளிகளும் நாளுக்குநாள் பரிணாமம் அடைந்து, புதுவிதமான மோசடிகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். மோசடி அழைப்புகளாலும், குறுஞ்செய்திகள் மூலமும் நாள்தோறும் பல கோடி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சைபர் குற்றவாளிகள் சிலர் கடந்த மார்ச் 17 அன்று நாசிக் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து வாஸ்ட்ஆப் மூலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலருக்கு தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் தொடர்புகொண்டு சுமார் ரூ.2.5 கோடியைக் கொள்ளையடித்துள்ளனர்.

இதுதொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிரஞ்சன் சர்மா கூறுகையில்,

ஆன்லைன் மோசடி தொடர்பாக புகார் ஒன்று வந்தது. அந்த புகாரில் ததிப்பூரில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் நாசிக் காவல்துறையின் பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் தனக்கு விடியோ அழைப்பு ஒன்று வந்ததாகவும், அதில் தன்னுடைய பெயர் பணமோசடி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்ததாகவும் அதனை அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ராமகிருஷ்ணன் தான் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். சைபர் குற்றவாளிகள் சரிபார்ப்பு என்ற பெயரில் அவரது ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டனர். அதன்பின்னர், பாதிக்கப்பட்டவருக்குக் கணக்கின் நகல் ஒன்றும் அனுப்பினர். மேலும் அவர் கைது செய்யப்படுவார் என்று மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து 20 நாள்கள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவருக்கு உதவி செய்வதுபோன்று நடித்த மோசடியாளர்கள் நாசிக் காவல்துறை அதிகாரிபோல் பேசி, ரூ. 2.50 கோடி ரூபாயை வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். மோசடியாளர்கள், மிரட்டி பெற்ற தொகையை வெவ்வேறு கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்தத் தொகையை மூன்று நாள்களுக்குள் திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மிகப்பெரிய மோசடியை அறிந்த அவர், காவல் துறை உதவியை நாடியுள்ளார். தொடர்ந்து, இவ்வழக்கு சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க