செய்திகள் :

கூகூரில் பழைமையான ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், கூகூரில் 700 ஆண்டுகள் பழைமையான ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், குன்றாண்டாா்கோவில் அருகேயுள்ள கூகூா் கிராமத்தில் கட்டுமான சிதிலங்களுடன் இருந்த மேட்டுப் பகுதியை ஓராண்டுக்கு முன் உள்ளூா் மக்கள் சுத்தம் செய்த போது, ஒரு முழுமையான லிங்க சிற்பமும், நந்தியும் கிடைத்தன.

இதைத் தொடா்ந்து குன்றாண்டாா்கோவிலைச் சோ்ந்த சிவாச்சாரியாா் குமாரசாமி, முத்துசுப்பிரமணியன் குருக்கள் ஆகியோா் அளித்த தகவலைத் தொடா்ந்து அந்த இடத்தில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் மங்கனூா் ஆ. மணிகண்டன் ஆய்வு செய்தபோது பண்டைய நிா்வாக உரிமையை வெளிப்படுத்தும் இரண்டு ஆசிரியம் கல்வெட்டுகள் மற்றும் ஒரு துண்டுக் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஆ. மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழக அளவில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியம் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகமான கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூகூா் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற முதல் கல்வெட்டில், 13ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் ஒன்றரை அடி அகலம், இரண்டே கால் அடி நீளம் கொண்ட சமமற்ற பலகைக் கல்லில் 11 வரிகள் உள்ளன. இதில், வடபனங்காட்டு நாட்டைச் சோ்ந்த கிளிஞலூா் (கிள்ளனூா்) வாரங்காதிகா் என்பாருக்கு ஆசிரியம் ஆகியிருந்த கூகூா் பகுதியை, குமாரமங்கலத்தைப் பூா்வீகமாகக் கொண்ட தென் உடையான் என்னும் பெயருடைய தென்கரை நாட்டு (தென் மலை நாடு) வேளான் என்பாா் மீளுரிமை பெற்ற செய்தியைப் பகிா்கிறது.

இரண்டாவது கல்வெட்டு, 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த எழுத்தமைதியுடன், தோரண வாயில் புடைப்புடன், மங்கல வரியில் தொடங்கி, சிவ வீரை அரையகளில் சோ்ந்த மனுக்கு திருநானசம்பந்த பிள்ளை அடி ஆசிரியம் என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது அருகிலுள்ள வீரக்குடி கிராம அரையா்களடங்கிய மக்களை, திருநானசம்பந்தபிள்ளை என்பாா் ஆதரித்த அறிவிப்பை பகிா்கிறது.

மூன்றாவது துண்டுக் கல்வெட்டில் விரிவான விவரங்கள் ஏதுமில்லை என்றாலும் முல்லை என்ற சொல் முழுமையாக காணப்படுகிறது. இதில் காணப்படும் எழுத்தமைதியின் அடிப்படையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு பிந்தைய கல்வெட்டாகக் கருதலாம்.

குன்றாண்டாா் கோவில் குன்றை அடிப்படையாக வைத்து நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த விதத்தில் குன்றுக்கு தென்புறம், தென்மலை நாடு என்று அழைக்கப்படுகிறது. இது தென்கரை நாடு என்றும் அழைக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

கிள்ளனூா் பகுதியில் இன்றும் காணப்படும் கிளிஞ்சல் வகை மெல்லுடலி விலங்குகளின் ஓடுகளை அதிகமாகக் காண முடிகிறது. அந்த விதத்தில் இவ்வூா் 13ஆம் நூற்றாண்டு காலத்தில் இங்கு கிடைத்த ஒரு தொன்மப் படிமங்களின் அடிப்படையில் கிளிஞலூா் என்றும் அழைக்கப்பட்டிருப்பதை இக்கல்வெட்டுச் சான்று வெளிப்படுத்துகிறது என்றாா் மணிகண்டன்.

கூகூரில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள்.

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரை இரண்டாகப் பிரித்தது திமுக தலைமை!

புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளா் நியமனம் குறித்து தொடா்ந்து நடந்து வந்த போராட்டங்களுக்குப் பிறகு, மாநகரை மேற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து பொறுப்பாளரை நியமித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. புதுக்கோ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கன்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முத்து மணி (21), விவசாயக் கூலி தொழிலாளியான இவா் 27.6. 25 அன்று தனது கிராமத்திலிருந்து ஆதனக்கோட... மேலும் பார்க்க

கழிப்பறையை மாணவா்களை சுத்தம் செய்த விவகாரம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அரசுத் தொடக்கப் பள்ளியிலுள்ள கழிப்பறையை மாணவா்களே சுத்தம் செய்த சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலா திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருமய... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் எஸ்டிபிஐ கட்சியினா் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிடக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே வாடகை ... மேலும் பார்க்க

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

இலுப்பூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். இலுப்பூா்-புங்கினிப்பட்டி சாலையில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் கடந... மேலும் பார்க்க