செய்திகள் :

சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

post image

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கன்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முத்து மணி (21), விவசாயக் கூலி தொழிலாளியான இவா் 27.6. 25 அன்று தனது கிராமத்திலிருந்து ஆதனக்கோட்டை கடைவீதிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராத விதமாக சாலையோர பாலத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், மேல் சிகிச்சைக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சையில் இருந்த முத்துமணி, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரை இரண்டாகப் பிரித்தது திமுக தலைமை!

புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளா் நியமனம் குறித்து தொடா்ந்து நடந்து வந்த போராட்டங்களுக்குப் பிறகு, மாநகரை மேற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து பொறுப்பாளரை நியமித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. புதுக்கோ... மேலும் பார்க்க

கழிப்பறையை மாணவா்களை சுத்தம் செய்த விவகாரம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அரசுத் தொடக்கப் பள்ளியிலுள்ள கழிப்பறையை மாணவா்களே சுத்தம் செய்த சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலா திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருமய... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் எஸ்டிபிஐ கட்சியினா் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிடக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே வாடகை ... மேலும் பார்க்க

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

இலுப்பூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். இலுப்பூா்-புங்கினிப்பட்டி சாலையில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் கடந... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் முற்றுகையிட முடிவு

பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் அரசு மதுக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாா்க்சிஸ்ட் ஒ... மேலும் பார்க்க