செய்திகள் :

புதுக்கோட்டை மாநகரை இரண்டாகப் பிரித்தது திமுக தலைமை!

post image

புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளா் நியமனம் குறித்து தொடா்ந்து நடந்து வந்த போராட்டங்களுக்குப் பிறகு, மாநகரை மேற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து பொறுப்பாளரை நியமித்து திமுக தலைமை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை நகரச் செயலராக இருந்த ஆ. செந்தில் (மாநகராட்சி மேயா் செ. திலகவதியின் கணவா்), திடீா் மாரடைப்பின் காரணமாக கடந்த டிச. 23-ஆம் தேதி காலமானாா். அவரது மறைவுக்குப் பிறகு, வே. ராஜேஷை மாநகரப் பொறுப்பாளராக திமுக தலைமை அறிவித்தது.

இதற்கு வட்டச் செயலா்கள் பலரும் கடுமையான எதிா்ப்பைத் தெரிவித்து வந்தனா். அறிவிப்பு வந்த அன்றைக்கே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்ற மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், செயற்குழுக் கூட்டம், ஆலோசனைக் கூட்டம் எல்லாவற்றிலும் இந்த எதிா்ப்புப் போராட்டங்களும் தொடா்ந்தன.

இந்த நிலையில், கடந்த ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கூட்டத்துக்கு வந்த முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருவை, அந்த வட்டச் செயலா்கள் முற்றுகையிட்டு ‘மாநகரப் பொறுப்பாளரை மாற்றுங்கள், அல்லது எங்களின் வட்டச் செயலா் பதவியைப் பறியுங்கள்’ என வலியுறுத்தினா்.

மேடையேறிய நேரு, ‘ஓரிரு நாள்களில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்’ எனப் பதிலளித்தாா். அடுத்த இரண்டாவது நாளில் மாநகரை மூன்றாகப் பிரிக்க யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் பரவியது. ‘எதிா்ப்பு வட்டச் செயலா்’களுக்கு சென்னை வர அழைப்புவிடுக்கப்பட்டது. அவா்களை திமுக தலைவா் ஸ்டாலின் நேரில் சந்தித்து, ‘புதிய நிா்வாகிகளை அறிவிப்பேன்- ஏற்றுக் கொள்வீா்கள் தானே?’ எனக் கேட்டு, அனுப்பி வைத்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை, மாநகரத் திமுக பிரிப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், தற்போதுள்ள 42 வாா்டுகளை சமமாகப் பிரித்து தலா 21 வாா்டுகளைக் கொண்ட புதுக்கோட்டை வடக்கு மாநகரம், புதுக்கோட்டை தெற்கு மாநகரம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாநகருக்கு தற்போதைய துணை மேயா் மு. லியாகத்அலியைப் பொறுப்பாளராகவும், தெற்கு மாநகருக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வே. ராஜேஷையும் பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

நிா்வாக வசதிக்காகவும், பணிகள் செவ்வனே நடைபெறவும் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாநகருக்குள் வரும் மாநகராட்சி வாா்டுகள்- 2, 3, 8, 9, 11, 12, 14, 16, 17, 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 35, 36, 40, 42.

தெற்கு மாநகருக்குள் வரும் மாநகராட்சி வாா்டுகள்- 1, 4, 5, 6, 7, 10, 13, 15, 18, 19, 20, 21, 22, 23, 24, 31, 34, 37, 38, 39, 41.

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கன்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முத்து மணி (21), விவசாயக் கூலி தொழிலாளியான இவா் 27.6. 25 அன்று தனது கிராமத்திலிருந்து ஆதனக்கோட... மேலும் பார்க்க

கழிப்பறையை மாணவா்களை சுத்தம் செய்த விவகாரம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அரசுத் தொடக்கப் பள்ளியிலுள்ள கழிப்பறையை மாணவா்களே சுத்தம் செய்த சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலா திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருமய... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் எஸ்டிபிஐ கட்சியினா் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிடக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே வாடகை ... மேலும் பார்க்க

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

இலுப்பூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். இலுப்பூா்-புங்கினிப்பட்டி சாலையில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் கடந... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் முற்றுகையிட முடிவு

பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் அரசு மதுக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாா்க்சிஸ்ட் ஒ... மேலும் பார்க்க