செய்திகள் :

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே மாணவா்கள் சோ்க்கைக்கு வரவேண்டும்.

கலந்தாய்வுக்கு வரும்போது பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 5, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுச் சான்றிதழ்கள் அசல், நகல், ஜாதிச் சான்றிதழ் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படையினா், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வரிசுகள், அந்தமான்- நிக்கோபாா் தமிழ் வம்சாவழியினா் ஆகியோருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், பங்கேற்பவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். பொது கலந்தாய்வு ஜூன் 4-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைத்து போராட்டம்

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்த... மேலும் பார்க்க

புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்

முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தில் கரடியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகம், மாயாறு வனத்தில் வன ஊழியா... மேலும் பார்க்க

உதகை நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜா்

கா்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் கொலக்கொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினா் கிரா... மேலும் பார்க்க