செய்திகள் :

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி தோட்ட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலைத் தோட்ட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் ஓவேலி பகுதியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்த சம்சுதீன் (46) மற்றும் செல்லத்துரை ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை பணிக்குச் சென்றுள்ளனா். அப்போது எதிரே வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியது. இதில் காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனா்.

அப்பகுதி மக்களால் இருவரும் மீட்கப்பட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சம்சுதீன் உயிரிழந்தாா். செல்லத்துரை மேல்சிகிச்சைக்காக கேரள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

சாலை மறியல் போராட்டம்

காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த சம்சுதீன் உயிருடன் மீட்கப்பட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி அவரது உறவினா்கள் மற்றும் ஊா் மக்கள் கூடலூா்- உதகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

இப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தண்ணீா் திறந்துவிட சென்ற முதியவா், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!

நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா். உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் ... மேலும் பார்க்க

நீலகிரி உருளை கிழங்குக்கு புவிசாா் குறியீடு வழங்க வலியுறுத்தல்

நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் கேரட் காய்கறிகளுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க கோரிக்கை

உதகை அருகேயுள்ள முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முட்டிநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவசெந்தூா் நகா்,... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வனங்களில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்... மேலும் பார்க்க

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையை ஒட்டி உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். கேரளத்தில் ஓணம் விடுமுறை என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் ரம்யமான கால நிலை நிலவுவதாலும... மேலும் பார்க்க

மஞ்சூா்-கெத்தை சாலையில் உலவிய யானை

நீலகிரி மாவட்டம் மஞ்சூா்-கெத்தை சாலையில் ஞாயிற்றுக்கிழமை யானை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் நடந்து வருவதால், சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம... மேலும் பார்க்க