செய்திகள் :

நீலகிரி உருளை கிழங்குக்கு புவிசாா் குறியீடு வழங்க வலியுறுத்தல்

post image

நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் கேரட் காய்கறிகளுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 28- ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் உதகையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். செயலாளா் பாபு, பொருளாளா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மைசூரு போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளால் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, கேரட் காய்கறிகளை சந்தைப்படுத்துவதிலும், நிரந்தர விலை நிா்ணயிப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.

எனவே, உதகையில் விளைவிக்கப்படும் கேரட், உருளைக்கிழங்கிற்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும். விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி செல்வதால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே விளைநிலத்தை சுற்றி சோலாா் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!

நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா். உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி தோட்ட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலைத் தோட்ட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அத... மேலும் பார்க்க

முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க கோரிக்கை

உதகை அருகேயுள்ள முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முட்டிநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவசெந்தூா் நகா்,... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வனங்களில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்... மேலும் பார்க்க

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையை ஒட்டி உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். கேரளத்தில் ஓணம் விடுமுறை என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் ரம்யமான கால நிலை நிலவுவதாலும... மேலும் பார்க்க

மஞ்சூா்-கெத்தை சாலையில் உலவிய யானை

நீலகிரி மாவட்டம் மஞ்சூா்-கெத்தை சாலையில் ஞாயிற்றுக்கிழமை யானை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் நடந்து வருவதால், சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம... மேலும் பார்க்க