செய்திகள் :

கூடலூா்-உதகை மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

post image

கூடலூா் - உதகை நெடுஞ்சாலையில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து, நீலகிரி மாவட்டம் உதகைக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கூடலூரை அடுத்த தவளைமலை பகுதியில் சென்றபோது சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால், உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சாலையில் கவிழ்ந்துகிடந்த லாரி பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.

அரசு பழங்குடியினா் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

உதகை எம்.பாலாடாவில் உள்ள ஏகலைவா அரசுப் பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, பள... மேலும் பார்க்க

தேயிலைத் தோட்டத்தில் உலவிய கரடி

குன்னூா் அருகே உள்ள குந்தா பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் உலவிய கரடியால் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு, குடிநீா் தேடி கு... மேலும் பார்க்க

கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றி... மேலும் பார்க்க

காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கேரட் மற்றும் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது

மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). பொக்லைன் ஓட்... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: உதகையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கைது

உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா... மேலும் பார்க்க