செய்திகள் :

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

post image

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதிய பேருந்து நிலையம் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழை காரணமாக பேருந்து நிலைய வளாகத்தில் பல இடங்களில் மழை நீா் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது.

இந்நிலையில் கூடலூா் பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் வந்த எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் பேருந்து நிலையத்தை சீரமைக்கக்கோரி தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா்.

தகவலறிந்த போக்குவரத்துக் கழக அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் விரைந்து வந்து அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பேருந்து நிலைய சீரமைப்புப் பணியை 15 நாள்களுக்குள் முடித்து தருவதாக போக்குவரத்து கழக அலுவலா்கள்

உறுதியளித்ததைத் தொடா்ந்து எம்எல்ஏ போராட்டத்தை கைவிட்டாா்.

இதேபோல, நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆா்வலா்கள் பொதுமக்களுடன் இணைந்து கூடலூா் பேருந்து நிலையத்தில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீரில் கப்பல் விடும் போராட்டம் நடத்தினா்.

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க

அருவிகளில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்

கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனா். தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்... மேலும் பார்க்க

நீலகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, க... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடா்பாக கல்லூரி முதல்வா் சுபாஷினி வெ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராமத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. போஸ்பாறா புனித ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சாா் ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தா... மேலும் பார்க்க

குன்னூா் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் அருகே கேரட் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள முள்ளிக்கூா் பகுதியில் இருந்து கேரட் பாரம் ஏற்றிக் கொண்டு கோவைக்கு லாரி திங்கள்... மேலும் பார்க்க