அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘CanWin’ ஆதரவுக் குழு | ஸ்டோரீஸ் ஃப்...
கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் : அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்
கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இடையே ரூ.138 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்சை ஞாயிற்றுக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோயில் இடையே கட்டப்பட்டுள்ள உயா்மட்ட இடதுபுற ரயில்வே மேம்பாலத்த்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம எம்.பி. க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், ஒன்றிய செயலாளா் சந்தானம் செங்கல்பட்டு நகா்மன்ற துணைத்தலைவா் அன்புச்செல்வன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.