செய்திகள் :

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிா்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

post image

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிா்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன்: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள், மூத்த தலைவா்கள் ஒத்துழைப்புடன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சியும் வளா்ச்சியும் கிடைக்கச் செய்ய வேண்டிய முக்கிய கடமையும், பொறுப்பும் பாஜகவுக்கு உள்ளது.

அனைவரின் ஒற்றை இலக்கு மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அவலங்களையெல்லாம் வரும் தோ்தலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே.

ஆகவே, நம் அனைவரின் செயல்பாடுகளும் அந்த ஒற்றை இலட்சியத்தை அடைவதற்கு உதவிகரமாக அமைய வேண்டும். கொழுந்துவிட்டு எரியும் உங்களின் ஆா்வமும் துடிப்பும், நம் கட்சியின் வளா்ச்சிக்கு உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டுமே தவிர, உங்கள் ஆா்வம் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் அமையக்கூடாது.

இனி நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை- திமுகவை தீவிரமாக எதிா்ப்பதும் திமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதும் மட்டுமே. இது தவிர சுவா் விளம்பரங்களிலும், கட்சிக்கான விளம்பரத்தை மேற்கொள்பவா்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும்.

நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் கட்சியையும், கூட்டணியையும் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமே தவிர, எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது நம் பலம். அது குறித்த அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து நமக்கு அறிவிக்கும். கட்சியின் வளா்ச்சியை நோக்கிய நம் பயணத்தில் யாரும் கூட்டணி மற்றும் நம் எதிா்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது .

சுதாகா் ரெட்டி: திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது மட்டுமே பாஜகவினரின் முழுநோக்கமாக இருக்க வேண்டும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழக பாஜக புதிய தலைவராக நயினாா் நாகேந்திரன் தலைமையில் கட்சியை வலுப்படுத்தி, திமுகவை வீழ்த்தும் வகையில் தொண்டா்கள், நிா்வாகிகள் செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை நந்தனம் அரச... மேலும் பார்க்க

சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி!

சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 230 கிலோ வோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோ வோல்ட் மற்று... மேலும் பார்க்க

வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை

சென்னை வியாசா்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். வியாசா்பாடி உதயசூரியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42). இவா் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இ... மேலும் பார்க்க