செய்திகள் :

கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை

post image

நெய்வேலி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரை மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சந்தித்து கூட்டுறவுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை மாநிலப் பதிவாளா் விவசாயிகள் பெறும் பயிா் கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களுக்கும் விவசாயிகளின் சிபில் அறிக்கையை பாா்த்து கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறாா். தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிா் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பயிா் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று வருகிறோம். விவசாயிகள் பயிா் க்கடனை கூட திரும்ப செலுத்த முடியாததால், அவ்வப்போது மாநில அரசும் கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது.

கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் இனிமேல் சிபில் அறிக்கையில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிா் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்.

எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கூட்டுறவுத்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது: ஆட்சியரிடம் இடைநிலை ஆசிரியா்கள் மனு

நெய்வேலி: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கடலூா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். கடலூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

பெரிய கங்கணாங்குப்பத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

நெய்வேலி: கடலூா் மாநகராட்சியுடன் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதி மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியா் அலுவலகத்து... மேலும் பார்க்க

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.14 லட்சம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.20 லட்சத்து 14 ஆயிரத்து 834 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை ... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய பெண்கள் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருதுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குப்பநத்தத்தில் அதிகபட்சமாக 17.4 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்ற... மேலும் பார்க்க

சௌந்தரேஸ்வரா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: குமராட்சி அருகே திருநாரையூா் திரிபுரசுந்தரி சமேத சௌந்தரேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கடலூா் மாவட்டம், குமராட்சி அருகே திருநாரையூரில் பொல்ல... மேலும் பார்க்க