Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
பெரிய கங்கணாங்குப்பத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
நெய்வேலி: கடலூா் மாநகராட்சியுடன் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதி மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
அவா்கள் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:
பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் பெரும் பகுதி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவா்கள். எங்கள் ஊராட்சியை கடலூா் மாநகராட்சியுடன் இணைக்கப் போவதாகக் கூறி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்காமல் உள்ளனா்.
இதுதொடா்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் குடும்ப அட்டை, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க விரும்புகிறோம். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.