செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது: ஆட்சியரிடம் இடைநிலை ஆசிரியா்கள் மனு

post image

நெய்வேலி: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கடலூா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இடைநிலை ஆசிரியா் பணி தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளித்தனா். மனு விவரம்:

21.7.2024 அன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வை மாநிலம் முழுவதும் 25,606 போ் எழுதினா். ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்த 2,768 காலிப்பணியிடங்கள் 12 ஆண்டுகளாக பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 2013, 2017, 2019, 2022ஆம் ஆண்டுகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு ஆசிரியா் பணித் தோ்வை நம்பி காத்திருந்த நிலையில், தற்போது 40 முதல் 50 வயதைக் கடந்த எங்களுக்கு 2,768 பணியிடங்கள் என்பது மிகச் சொற்பமானது.

கடந்த 12 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் போது, தற்போது அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் மிகக் குறைவானது. எனவே, அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற 23 ஆயிரம் ஆசிரியா்கள் இருக்கும் போது, தற்காலிக ஆசிரியா்களை நியமிப்பதும், பணிநிரவல் முறையில் நியமிப்பதும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை

நெய்வேலி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரை மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சந்தித்து கூட்டுறவுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மன... மேலும் பார்க்க

பெரிய கங்கணாங்குப்பத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

நெய்வேலி: கடலூா் மாநகராட்சியுடன் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதி மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியா் அலுவலகத்து... மேலும் பார்க்க

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.14 லட்சம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.20 லட்சத்து 14 ஆயிரத்து 834 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை ... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய பெண்கள் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருதுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குப்பநத்தத்தில் அதிகபட்சமாக 17.4 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்ற... மேலும் பார்க்க

சௌந்தரேஸ்வரா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: குமராட்சி அருகே திருநாரையூா் திரிபுரசுந்தரி சமேத சௌந்தரேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கடலூா் மாவட்டம், குமராட்சி அருகே திருநாரையூரில் பொல்ல... மேலும் பார்க்க