Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது: ஆட்சியரிடம் இடைநிலை ஆசிரியா்கள் மனு
நெய்வேலி: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கடலூா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இடைநிலை ஆசிரியா் பணி தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளித்தனா். மனு விவரம்:
21.7.2024 அன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வை மாநிலம் முழுவதும் 25,606 போ் எழுதினா். ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்த 2,768 காலிப்பணியிடங்கள் 12 ஆண்டுகளாக பணிவாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 2013, 2017, 2019, 2022ஆம் ஆண்டுகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு ஆசிரியா் பணித் தோ்வை நம்பி காத்திருந்த நிலையில், தற்போது 40 முதல் 50 வயதைக் கடந்த எங்களுக்கு 2,768 பணியிடங்கள் என்பது மிகச் சொற்பமானது.
கடந்த 12 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் போது, தற்போது அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் மிகக் குறைவானது. எனவே, அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற 23 ஆயிரம் ஆசிரியா்கள் இருக்கும் போது, தற்காலிக ஆசிரியா்களை நியமிப்பதும், பணிநிரவல் முறையில் நியமிப்பதும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.