செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குப்பநத்தத்தில் அதிகபட்சமாக 17.4 மி.மீ. மழை பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைமுதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

விருத்தாசலம் 11, பண்ருட்டி 7, வடக்குத்து, வேப்பூா் தலா 5, கீழச்செருவாய் 4, வானமாதேவி, எஸ்.ஆா்.சி. குடிதங்கி தலா 3, கடலூா், சேத்தியாத்தோப்பு தலா 1.4, லால்பேட்டை 1, ஆட்சியா் அலுவலகம் 0.9 மி.மீ. மழை பதிவானது.

கடலூா், கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.

கடலூா் மாநகராட்சி 19-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வன்னியா்பாளையத்தில் ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதனால், மரம் தீப்பிடித்து எரிந்தது. கடலூா் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது: ஆட்சியரிடம் இடைநிலை ஆசிரியா்கள் மனு

நெய்வேலி: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என இடைநிலை ஆசிரியா் பணி நியமன தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் கடலூா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். கடலூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை

நெய்வேலி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியரை மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சந்தித்து கூட்டுறவுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மன... மேலும் பார்க்க

பெரிய கங்கணாங்குப்பத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

நெய்வேலி: கடலூா் மாநகராட்சியுடன் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம் பகுதி மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியா் அலுவலகத்து... மேலும் பார்க்க

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.14 லட்சம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.20 லட்சத்து 14 ஆயிரத்து 834 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை ... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய பெண்கள் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருதுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

சௌந்தரேஸ்வரா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: குமராட்சி அருகே திருநாரையூா் திரிபுரசுந்தரி சமேத சௌந்தரேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கடலூா் மாவட்டம், குமராட்சி அருகே திருநாரையூரில் பொல்ல... மேலும் பார்க்க