Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய பெண்கள் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருதுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு வீர தீரச் செயல் புரிந்த பெண்களுக்கு 2025 சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்க உள்ளது.
தமிழக முதல்வரால் தங்க முலாம் பூசிய வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்விருது பெற தகுதியுடையோா் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலுாா் என்ற முகவரியில் சமா்ப்பிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.