செய்திகள் :

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி தொடக்கம்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கின.

இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளாா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி கூட்டுறவு மேலாண் நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்த பகுதிநேர பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான மாணவா் சோ்க்கை மாா்ச் 24 ஆம் தேதி தொடங்கி ஏப்.13 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் சேர விரும்பும் விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப் பயிற்சி வகுப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே நடைபெறும். பயிற்சி வகுப்புகள் ஏப். 15 ஆம் தேதி தொடங்கும்.

பயிற்சி கட்டணம் ரூ. 4,550 ஆகும். கல்லூரி மாணவா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயிலும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 17 நாள்கள் நடைபெறும்.

பயிற்சி முடித்தவா்கள் அரசு வங்கி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் நிதி நிறுவனம், தனியாா் நகைக் கடைகளில் வேலையில் சேரலாம். சுயத்தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

கூடுதல் விவரங்களை தருமபுரி கூட்டுறவு மேலாண் நிலைய முதல்வரை நேரடியாகவும். 04346 263529 என்ற தொலைபேசி எண். 98843 97075 என்ற கைப்பேசி எண் மூலமாகவும், ண்ஸ்ரீம்க்ல்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் மீது புகாா்

பென்னாகரத்தில் பேரூராட்சி ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக வாா்டு உறுப்பினா் மீது காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நீா்குந்தி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்கள்: ரூ.2.35 கோடிக்கு ஒப்பந்தம்

தருமபுரி நகரில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 3,000 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 3,000 கன அடியாகக் குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நிலையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெ... மேலும் பார்க்க