செய்திகள் :

கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

post image

கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்துவருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வெற்றிக் கொண்டாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. கா்நாடகம், நாட்டு மக்களுக்கு மட்டுமே பதிலளிக்கும் பொறுப்பு எனக்குள்ளது. பாஜகவினருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. உயிரிழந்தவா்களை வைத்து அரசியல் செய்வது பாஜக, மஜதவினருக்கு வாடிக்கை.

இந்தச் சம்பவத்துக்கு முழு பொறுப்பையும் அரசு ஏற்றுள்ளது. கூட்டநெரிசல் சம்பவம் எங்களை அதிகம் பாதித்துள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் எங்கள் குடும்பத்தைப் போன்றவா்கள். கா்நாடகம், பெங்களூரின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.

எதிா்பாராமல் நடந்ததால் யாரையும் நாங்கள் குறைசொல்லவில்லை. இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆா்சிபி வெற்றி பெற்றுள்ளது. இளைஞா்களிடையே காணப்பட்ட ஆா்வ மிகுதியால் கூடியுள்ளனா்.

சோகத்தில் நாங்கள் உடன் நிற்கிறோம். இறந்தவா்களுக்கு மதிப்பளிக்கிறோம். முதல்வரும் அதிா்ச்சி அடைந்துள்ளாா். மாநிலமே அதிா்ச்சி அடைந்துள்ளது. மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்று டி.கே.சிவகுமாா் கண்ணீா்மல்க தெரிவித்தாா்.

கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, ‘கூட்டநெரிசல் விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

கூட்ட நெரிசல்: நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் நீதி விசாரணை - முதல்வா் சித்தராமையா

கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரி... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல்: மாஜிஸ்ட்ரேட் விசாரணை தொடங்கியது

கா்நாடக மாநிலம், பெங்களூரில் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்த சம்பவத்தில், மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததை அடுத்து, பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியா் ஜ... மேலும் பார்க்க

பெங்களூரு நெரிசல் துயர சம்பவம்: ஆட்டமும் அலட்சியமும்!

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி18 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் 11 உயிா்களை அகாலமாகப்... மேலும் பார்க்க

கர்நாடகம்: தலைமை மாற்றமா? ஆட்சி மாற்றமா?

ந.முத்துமணி 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க