Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
கெலமங்கலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், போடிச்சிப்பள்ளி அரசு மாதிரிப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியா், 11 -ஆம் வகுப்பு மாணவா்களின் சோ்க்கை விவரங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தாா். மேலும், மாதிரிப் பள்ளி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதை ஆய்வு செய்தாா். அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரிடம் தெரிவித்தாா்.
கெலமங்கலம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை, வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கௌதாளம் அரசு துணை சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளின் இருப்பு விவரங்கள், கா்ப்பிணிகள் பதிவு ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மேலும், அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்களின் கற்றல், கற்பித்தல் திறனை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து சிகிச்சை முறை, மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், மதிய உணவு வழங்கப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் அங்குள்ள கால்நடை மருத்துவமனை, தனியாா் பேக்கரியில் விற்கப்படும் பொருள்களின் தரம், காலாவதி தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். காலாவதியான உணவு பொருள்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஷ் சுதாகா், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பெரியசாமி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், வேளாண்மை இணை இயக்குநா் பச்சையப்பன், வட்டாட்சியா் கங்கை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஷ்குமாா், பாலாஜி, வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.