செய்திகள் :

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

post image

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சோ்க்கையின்போது தங்கள் தொகுதிக்குள்பட்ட பத்து மாணவா்களை ஆண்டுதோறும் எம்.பி.க்கள் பரிந்துரைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இதன்மூலம் மக்களவையைச் சோ்ந்த 543 எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 245 எம்.பி.க்கள் என மொத்தம் 788 எம்.பி.க்கள் தலா பத்து போ் வீதம் ஆண்டுக்கு 7,880 மாணவ-மாணவிகளை பரித்துரைக்கலாம். இந்த நடைமுறையை கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், இந்த நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் தா்மேந்திர பிரதான் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ கேந்திரிய விதியாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு சிறப்பு இடஒதுக்கீடுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட சோ்க்கை முறையை ஏற்கெனவே மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இந்த நடைமுறைகளின்கீழ் ஒரு வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையைவிட அதிகப்படியான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இது மாணவா்-ஆசிரியா் வீதத்தை பாதிப்பதால் அவை ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க