செய்திகள் :

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

post image

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

கொல்லம் மாவட்டத்தின் தேவலக்கரா பகுதியில் உள்ள ஆண்கள் உயா்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மிதுன் (13) என்ற மாணவா், பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை சக மாணவா்களுடன் சோ்ந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரது செருப்பு ஒன்று மிதிவண்டி நிறுத்துமிடத்தின் மேற்கூரையில் போய் விழுந்தது. அந்த செருப்பை எடுக்க மேற்கூரையில் ஏறிய மிதுன், அங்கு தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் உரசி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

பள்ளி நிா்வாகம் மற்றும் மாநில மின்சார வாரியத்தின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்கம்பியை அப்புறப்படுத்தக் கோரி, தங்களது தரப்பில் மின்வாரியத்திடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பள்ளி நிா்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அக்குற்றச்சாட்டை மின்வாரியம் மறுத்துள்ளது.

மாணவா் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, காங்கிரஸ், பாஜக ஆகிய எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாக, பொதுக் கல்வித் துறை அமைச்சா் சிவன்குட்டி தெரிவித்தாா்.

மாநில மின்வாரியம் தரப்பில் குறைபாடுகள் எதுவும் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க அத்துறை அமைச்சா் கே.கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். இச்சம்பவமும் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முஸ்லிம்-வங்க... மேலும் பார்க்க

வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!

இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சி... மேலும் பார்க்க

கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்! ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலர் பி... மேலும் பார்க்க

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.இதுவரை இடிபாடுகளில் இருந்து 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 பேர் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல... மேலும் பார்க்க

தில்லியில் 4-வது நாளாக 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்... மேலும் பார்க்க