செய்திகள் :

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

post image

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.

அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோன் நடத்தி வந்தார். அங்கு 2017-ம் ஆண்டு எர்ணாகுளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்துவந்தார்.

பாராமெடிக்கலில் பிராக்டிக்கல் பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது தன்னைப் பாலியல் தொல்லை செய்ததாக சி.டி.ஜோமோன் மீது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அந்த மாணவி போலீஸில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் ஜோமோனை போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து ஜோமோனின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.

அவர் நடத்திய நிறுவனம் நிர்மூலமானது. வழக்குக்காக கோர்ட்டுக்கு அலைந்து அல்லல்பட்டார். உறவினர்கள் வெறுத்த நிலையில், உணர்ச்சியற்ற நடைப்பிணம் போன்று வாழ்ந்து வந்தார்.

பாலியல் தொல்லை

இதற்கிடையே அந்த மாணவிக்குத் திருமணம் நடந்து, குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். அந்த மாணவிக்கு ஜோமோனின் மிகவும் கஷ்டமான வாழ்க்கை குறித்த கடந்த ஆண்டு தெரியவந்தது.

இதையடுத்து, சிலரின் தூண்டுதலின் பேரிலும், துன்புறுத்தல் காரணமாகவும் அப்போது புகார் அளித்ததாக அந்த முன்னாள் மாணவி தனது கணவரிடம் தெரிவித்தார்.

அத்துடன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்த மாணவி கணவருடன் சேர்ந்து ஜோமோனின் ஊரில் உள்ள சர்சுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விபரத்தைத் தெரிவித்தார்.

மேலும், ஜோமோனைச் சந்தித்துத் தான் பொய் புகார் அளித்தது குறித்துக் கூறி மன்னிப்பு கேட்டார். மேலும், ஜோமோனின் குடும்பத்தாரையும் சந்தித்து அவர் நிரபராதி என வெளிப்படையாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

மேலும் கோர்ட்டுக்குச் சென்று ஜோமோன் மீது பொய் புகார் அளித்தது குறித்துக் கூறி வழக்கை வாபஸ் வாங்கினார்.

கைது
கைது

இதையடுத்து ஜோமோனை தவறாக நினைத்தவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றினர். அதேசமயம் மாணவியின் பொய் புகாரால் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் ஜோமோன்.

இதுபற்றி ஜோமோன் கூறுகையில், "என்மீது பாலியல் புகார் அளித்த சம்பவம் நடப்பதற்கு முன்பு சிலர் என்னிடம் பணம் கேட்டு தொல்லை செய்தனர்.

அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவி பாலியல் புகார் அளித்தார். போலீஸ் என்னைக் கைது செய்ததும் பாராமெடிக்கல் நிறுவனத்தைப் பூட்டினேன்.

உறவினர்களும் என்னை வெறுத்து ஒதுக்கினர். அதன் பிறகு வாழ்கையை ஓட்ட பல்வேறு வேலைகள் செய்தேன். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்றும் சிந்தித்தேன். நான் பொறுமையாகப் போராடியதற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க