செய்திகள் :

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன. இதில், புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரின் அறைகளோடு குடிமைப் பொருள் வழங்கல் துறை, கனிம வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நிலவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக முகவரிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் வந்தது. அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கும், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் புதிய, பழைய கட்டடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த அஞ்சல் முகவரி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

Summary

The Bomb Disposal Unit of the Coimbatore District Collector's Office has been raided after a bomb threat was made in a letter.

பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்... மேலும் பார்க்க

விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவ... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.ஆந்திரம் மாநிலம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: நான்கு நாள்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே குறைந்தது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியின் வெள... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின் படி, மியான்மரில் வ... மேலும் பார்க்க

பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலி அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்... மேலும் பார்க்க