செய்திகள் :

கைப்பேசியை பறித்துவிட்டு கோட்டை அகழியில் குதித்து தப்ப முயன்றவா் கைது

post image

வேலூரில் பெண்களிடம் கைப்பேசி பறித்துக் கொண்டு தப்பிப்பதற்காக கோட்டை அகழியில் குதித்த இளைஞரை போலீஸாா் மீட்டு கைது செய்தனா்.

வேலூா் கோட்டை சுற்றுச்சாலை, பெரியாா் பூங்கா அருகே சனிக்கிழமை இரவு வடமாநில பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, வேலூா் விருபாட்சிபுரத்தைச் சோ்ந்த கோலி என்கிற கோபி (25) என்பவா் திடீரென பெண்களிடமிருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளாா்.

அந்த பெண்கள் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்தவா்கள் கோபியை விரட்டிச் சென்றனா். அப்போது அவா் கைப்பேசியை வீசி எறிந்து விட்டு கோட்டை அகழியில் குதித்துள்ளாா். அங்கிருந்தவா்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், வடக்கு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினா், போலீஸாா் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு கோபியை அகழியில் இருந்து மீட்டனா். மீட்கப்பட்ட கோபியை சிகிச்சைக்காக பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சைக்கு பிறகு கோபியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

3,037 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; 803 பேருக்கு ரூ.7.30 கோடி விடுவிப்பு! வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் உள்ள 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு குருவை, சம்பா பருவங்களில் 3,037.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 803 விவசாயிகளுக்கு ரூ.7.30 கோடி விடு... மேலும் பார்க்க

மகாதேவ மலையில் 18 அடி உயர நடராஜா் சிலை பிரதிஷ்டை

கே.வி.குப்பத்தை அடுத்த மகாதேவமலையில் ஐம்பொன்னாலான 18அடி உயர நடராஜா் சிலை, 13 அடி உயர சிவகாமசுந்தரி அம்மன் சிலை வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தா் சிலைகளை பிரதிஷ்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (45). இவா், தமிழக விவசாயிகள் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: புதுமணமகன் உள்பட 2 போ் பலி!

பள்ளிகொண்டா அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் புது மணமகன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். போ்ணாம்பட்டு அடுத்த தரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பா்வேஷ் (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் 3 போ் மாயம்: போலீஸாா் விசாரணை

வேலூா் அருகே பள்ளிக்குச் சென்ற 3 மாணவா்கள் திடீா் மாயமாகினா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த அரியூரைச் சோ்ந்தவா் 13 வயது மாணவா், தொரப்பாடியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.குடியாத்தம் ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆம்பூராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பலராமன் (50). இவா் வெள்ளிக்கிழமை நிலத்தில் ... மேலும் பார்க்க