Ooty: இந்தி பதாகை சர்ச்சையில் ஊட்டி ரயில் நிலையம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! எ...
கொக்கைன் விற்பனை: 2 போ் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், நுங்கம்பாக்கம் போலீஸாரும் புதன்கிழமை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், 11 கிராம் கொக்கைன், ரூ.40 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகள் இருந்தது தெரியவந்தது. ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ (38), மேற்கு ஆப்பரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் (37) என்பதும், நுங்கம்பாக்கம், மயிலாப்பூா், கோடம்பாக்கம், பட்டினம்பாக்கம் ஆகிய பகுதியில் கொக்கைன் விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், சிலரை தேடி வருகின்றனா்.