கொங்கா்குளத்தில் மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கா்குளம் அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, கோயிலில் சுவாமி அழைத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கருப்பணசுவாமி வேடமணிந்து கலந்து கொண்டனா்.
இந்த ஊா்வலம் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மதுரை சாலையில் உள்ள மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலை வந்தடைந்தது.
இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.