செய்திகள் :

கொச்சி: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; மிதக்கும் கண்டெய்னர்கள்.. - பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரிக்கை

post image

லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

நேற்று (சனிக்கிழமை) கொச்சி துறைமுகத்துக்கு அந்த கப்பல் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் அரபிக்கடலில் நேற்று மதியம் 1.25 மணியளவில் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

விபத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. கப்பல் விபத்தில் சிக்கியது குறித்து கோஸ்ட் காட் மற்றும் கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படையின் ஒரு கப்பல் மற்றும் கோஸ்ட் காட்-க்கு சொந்தமான 2 கப்பல்களும் விபத்துக்குள்ளான கப்பல் அருகில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.

விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்கள் கடலில் மிதக்கின்றன

மேலும், சிறிய ட்ரோன்கள் மூலம் விபத்துக்குள்ளான கப்பலின் மேல் பகுதி கண்காணிக்கப்பட்டது. கப்பலில் மொத்தம் 24 ஊழியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 9 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடலில் குதித்து தப்பினர்.

மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையான கோஸ்ட் காட் மற்றும் இந்திய கப்பற்படை ஆகியன களமிறங்கியுள்ளன.

கடலில் குதித்த 9 பேர் உள்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீத முள்ள 3 பேரும் கப்பலில் பாதுகாப்பாக இருப்பதாகவும். அவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் கப்பலில் ஷிப் மாஸ்டராக இருந்துள்ளார். ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 20 பேர், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த 2 பேரும் கப்பலில் இருந்தனர்.

அந்த சரக்கு கப்பலில் இருந்து கடலில் கண்டெய்னர்கள் விழுந்துள்ளன. அதில் சல்ஃபர் கலந்த மரைன் கியாஸ் மற்றும் ஹைடென்சிட்டி டீசல் ஆகியவை உள்ளன. கடலில் வீழ்ந்துள்ள கண்டெய்மர்களை கண்டால் அதன் அருகில் செல்லவோ, திறக்கவோ கூடாது என பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரித்துள்ளது.

கொச்சியில் விபத்தில் சிக்கிய சைபீரியா நாட்டு சரக்கு கப்பல்

கடலில் செல்லும் மீனவர்களோ, அல்லது கரை ஒதுங்கும் கண்டெய்னர்களை பொதுமக்கள் கண்டாலோ உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது 112 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும். கண்டெய்னர்களை திறக்க முற்படக்கூடாது. அவற்றை திறந்தால் உயிருக்கு ஆபத்தாகும் எனவும் பேரிடர் மேலாண்மை குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி: தலையில் முறிந்து விழுந்த மரம்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் முடிந்த சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை முதல் தற்போது வரை பலத்த காற்றுடன் தொ... மேலும் பார்க்க

மரத்தடியில் உறங்கிய வியாபாரி; சாக்கடை கழிவை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்... உயிரிழந்த சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவர் கடுமையான வெயில் காரணமாக அங்கு சாலையோரம் இருந்த மரத்திற்கு அடியில் ஓய்வெடுக்க படுத்தார். அப்... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் நெஞ்சு வலி; ஸ்டியரிங்கில் சாய்ந்த ஓட்டுநர்; நொடிகளில் பயணிகளை காப்பாற்றிய நடத்துனர்

ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, சாதுரியமாகச் செயல்பட்டு கையால் பிரேக் பிடித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனரின் செயல், கவனம் பெற்றிருக்கிறது.சம்பவம் ந... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் பலி - ஊட்டி மலைப்பாதையில் கோரம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய பிரியா (29). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின், மகள் வழி பேத்தி ஆவார். திவ்யாவுக்கு திருமணமாகி கார்த்திக் (வயது 30) என்கிற கணவர் உள்ளா... மேலும் பார்க்க

தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22). கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தி... மேலும் பார்க்க

`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நாகராஜ் மனைவி ஆன... மேலும் பார்க்க