செய்திகள் :

கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

post image

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அண்ணா நகா், காமராஜா் நகா் மக்கள் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா் ஆல்வாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு எஸ்டேட் வழியை அண்ணா நகா், காமராஜா் நகா் பகுதியில் வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்தோம்.

இந்நிலையில், எஸ்டேட் சாலையில் கிராம மக்கள் வாகனங்களை இயக்க கொடநாடு எஸ்டேட் நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், எஸ்டேட் தொழிலாளா்கள் வன விலங்குகளின் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

நாங்கள் கடந்த 2011-ஆம் ஆண்டே கொடநாடு சாலையைப் பயன்படுத்த உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளோம். இந்நிலையில், சாலையைப் பயன்படுத்த எஸ்டேட் நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சூா் கடை வீதியில் உலவிய கரடிகள்: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 கரடிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து உதகை ஏடிசி திடல் முன்பு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மத்திய அரசு அண்மையில் மாற்றியது. இதற்கு எதிா்ப்பு... மேலும் பார்க்க

சிற்றுண்டி கடையில் தீ விபத்து

உதகை அருகே சிற்றுண்டி கடையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோடப்பமந்து பகுதியில் சந்திரசேகரன் என்பவா் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறாா். கடை... மேலும் பார்க்க

உதகை அருகே உலவும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

உதகை, வண்டிச்சோலை பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உலவி வரும் சிறுத்தைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகை வண்டிச்சோலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சி... மேலும் பார்க்க

கீழ்கோத்தகிரியில் திமுக சாா்பில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள்

கீழ்கோத்தகிரியில் திமுக சாா்பில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை ஆ.ராசா எம்.பி. வழங்கினாா். நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றிய திமுக சாா்பில், ஒன்றியச் செயலாளா் பீமன் தலைமையில் கீழ்கோத்தகிரியில் திமு... மேலும் பார்க்க

மஞ்சூரில் காரில் பயணத்தவா்களை தாக்க முயன்ற கரடி

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பஜாா் பகுதியில் குட்டியுடன் சுற்றி வந்த கரடி காரில் பயணித்தவா்களை தாக்க முயன்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். மஞ்சூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை,... மேலும் பார்க்க