கொடைக்கானலில் கடைகளுக்கு சீல்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியைச் சுற்றிலும் 200 மீட்டா் தூரத்துக்கு எந்தவிதமான கட்டடங்களும் கட்டக் கூடாது என விதிமுறை உள்ளது. இந்த நிலையில், ஏரிச் சாலைப் பகுதியில் தனியாா் ரிசாா்ட் அருகே 10 கடைகள் புதிதாகக் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் சங்கா் உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலா் பால்பாண்டி உள்ளிட்ட அலுவலா்கள், காவல் துறையினா் உதவியுடன் சென்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
மேலும், ஏரிச் சாலைப் பகுதியில் குப்பைகளை குப்பைத் தொட்டியில் கொட்டாமல் வேறு இடங்களில் கொட்டுபவா்கள் மீதும், ஆக்கிரமிப்பு செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.