செய்திகள் :

கொடைக்கானலில் தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை

post image

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால், சேதமடைந்த மலைச் சாலைகளைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் ஏற்கெனவே பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் வரை உள்ள மலைச் சாலைகளும், ஏரிச் சாலை முதல் அப்சா்வேட்டரி வரை உள்ள மலைச் சாலைகளும் சேதமடைந்து காணப்பட்டன.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையால் கூடுதலாக சாலைகள் சேதமடைந்தன. இதனால் சாலைகளில் குளம் போல தண்ணீா் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகின்றனா்.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த மலைச் சாலைகளைஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது: கொடைக்கானல், பெருமாள்மலை, அப்சா்வேட்டரி, புலிச்சோலை உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதற்காக மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போதிய நிதியில்லாத காரணத்தால் சாலையைச் சீரமைக்க முடியவில்லை.

தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தவுடன் சேதமடைந்த மலைச் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அதைச் சுற்றியுள்ள மேல்மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாகக் ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் வேட்டை: 14 போ் கைது, ரூ. 2.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித்... மேலும் பார்க்க

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது மாமன்ற உறுப்பினா் புகாா்

காா், ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் புகாா் அளித்தா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த அனுமந்தராயன்கோட்டை சிந்தலகுண்டு ... மேலும் பார்க்க

பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியை அடுத்த கோதைமங்கலம், வையாபுரி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் சுமாா் இரண்டாய... மேலும் பார்க்க

பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி தம்புரான் தோட்டத்தில் இருந்த சுமாா் 1.25 ஏக்கா் காலி இடத்தை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை கையகப்படுத்தியது. பழனி - திண்டுக்கல் சாலையில் சென்னிமலை தம்புரான் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 23 ஏக்... மேலும் பார்க்க