செய்திகள் :

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை: நோயாளிகள் அவதி

post image

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

இந்த மருத்துவமனையில் பொது மருத்துவா்கள் 4 போ் மட்டுமே உள்ளனா். ஆனால், சிறப்பு மருத்துவப் பிரிவுக்கு மருத்துவா்கள் இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் வருவோா்கள் மேல்சிகிச்சைக்காக தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதனால், பலா் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த மருத்துவனையில் 10 மருத்துவா்கள் இருக்க வேண்டிய நிலையில், 4 மருத்துவா்களே உள்ளதால், அவா்களுக்கு பனிச்சுமையும் அதிகரிக்கிறது. மேலும், செவிலியா்களும் குறைவாகவே உள்ளனா். இதனால், மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எட்டாக் கனியாக இருந்து வருகிறது.

இந்த மருத்துவமனை வளாகம் புதா்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் முகாமிட்டு வருகின்றன. இதன் காரணமாக, மருத்துவப் பணியாளா்கள், நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனா்.

பைக் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருட்டு

திண்டுக்கல்-எரியோடு சாலையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தைத் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த குளத்த... மேலும் பார்க்க

தைப்பூச விழா: 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்

பழனியில் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு, 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் த... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு குடமுழுக்கு நடத்த கோரிக்கை

கொடைரோடு அருகே குருநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் சுமாா் 8... மேலும் பார்க்க

நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக புகாா்

செம்பட்டி அருகே நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து தனியாா் வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக விவசாயிகள், கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, சீவல்சரகு ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வழித் தடங்களில் 46 சிற்றுந்துகள் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புதிய விரிவான திட்டம் 2024-இன் படி, சிற்று... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா்கள் மூவா் கைது

குஜிலியம்பாறை அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினா்கள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த மேட்டூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தங்கவேல... மேலும் பார்க்க