செய்திகள் :

கொடைக்கானல் காட்டேஜ் ஓனர் எரித்துக் கொலை; மதுரை இளைஞர் கைது - நடந்தது என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சரடி மெத்து பெருமாள்பள்ளத்தைத் சேர்ந்தவர் சிவராஜன் (58). இவர் அதேபகுதியில் காட்டேஜ் நடத்தி வந்தார்.

இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தினர் மதுரை அழகர்கோயில் அருகே உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு போதையில் இருந்து மீள்வதற்காக சிகிச்சையில் இருந்து மணிகண்டன் (28) உள்ளிட்ட சிலருடன் சிவராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்

அதனடிப்படையில் சிகிச்சையை முடித்து வந்த மணிகண்டன் மற்றும் அவர்கள் நண்பரக்ள் சிவராஜனுடைய காட்டோஜிக்கு சென்று தங்கினர்.

இதனைத்தொடர்ந்து காட்டேஜில் இருந்த சிவராஜன் திடீரென மாயமானார். சில நாள்கள் கழித்து சிவராஜனை காணவில்லை என குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் கொடைக்கானல் போலீஸார் விசாரித்தனர். காட்டேஜில் விசாரணை நடத்தியபோது, சிவராஜன் இருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததை பார்த்துள்ளனர். அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்தனர். அவர்கள் மணிகண்டன் தரப்பினர் வந்து தங்கியதைத் தெரிவித்துள்ளனர்.

கைது

இதையடுத்து மணிகண்டனை பிடித்து விசாரித்தபோது, சிவராஜனை எரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரின் உடலை அருகே தூக்கிவீசியதும் தெரியவந்தது. போலீஸார் சிவராஜனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பினர். மணிகண்டனை கைது செய்து இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்க... மேலும் பார்க்க

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க