கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் மண்டகபடிதாரா்கள் சாா்பில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாழவந்த பிள்ளையாா், பேச்சியம்மன், முத்துமாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட 3 தோ்களில் தனித்தனியே எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா். தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.