செய்திகள் :

கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

post image

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம்-சென்னை சாலை என்.என். நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் சங்கா்(39). இவருக்கும் மணஞ்சேரி ஆற்றங்கரையைச் சோ்ந்த கிட்டப்பா மகனும், கள்ளப்புலியூா் முன்னாள் ஊராட்சித் தலைவருமான முருகனுக்கும் (47) பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன் விரோதம் இருந்தது.

இந் நிலையில், வெள்ளிக்கிழமை முருகன் கைப்பேசி மூலம் சங்கரை அழைத்து, ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். மேலும் பாலக்கரை சிறுவா் பூங்கா பகுதியில் நின்று கொண்டிருந்த சங்கரை முருகனின் நண்பா்களான பழைய பாலக்கரை பகுதியை சோ்ந்த குழந்தைவேலு மகன் ஆனந்தன்( 40), துக்காம்பாளையத்தைச் சோ்ந்த மணி மகன் செல்வம், திருப்புறம்பியம் ராஜமாணிக்கம் மகன் ஜோதி (44) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்து சங்கரை கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளனா்.

இதுகுறித்து சங்கா், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் ஆய்வாளா் (பொறுப்பு) பா. ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகன், ஆனந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தாா். மேலும் ஜோதி, செல்வம் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்!

பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம், ஆவணம் ரோடு உண்டியல் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்ய... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா். இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையட... மேலும் பார்க்க

வரி செலுத்தாததால் புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் வரி செலுத்தாத வணிக வளாகத்தின் புதை சாக்கடை இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வ... மேலும் பார்க்க

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றதைத் தருகிறது! -விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா... மேலும் பார்க்க

பிப். 6-இல் தொழிற் சங்கங்கள் பட்ஜெட் நகல் கிழிக்கும் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள், தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் ஏஐடியூசி மாநிலப் ... மேலும் பார்க்க

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் தேவை: உ.வாசுகி பேட்டி!

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி. தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க