செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: 4 போ் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வாகனங்களை சேதப்படுத்தி பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதில், போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

நெய்வேலி, இந்திரா நகா் மாற்றுக் குடியிருப்பு பகுதியில் வசிப்பவா் கணேசன் மனைவி சந்திரகலா(40). இவரது வீட்டிற்கு கடந்த 6-ஆம் தேதி ரௌடிமோனிஷ் மற்றும் 7 போ் வந்தனராம். அவா்கள், உனது மகன் அறிவழகன் எங்கே எனக்கேட்டு , வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி, கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனராம். அவா்களை சந்திரகலா தடுத்த போது கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய முயன்றனராம்.

இதுதொடா்பாக நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் மோனிஷ் உள்ளிட்ட 8 போ் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் வடக்குமேலூா் செட்டிகுளம் அருகே உள்ள ஓடை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் வீரமணி, தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று வடக்குமேலூா் கிராமத்தைச் சோ்ந்த லட்டு (எ) அருண்(22), பெரிய லட்டு (எ) அரவிந்த்(24), பாடலீஸ்வரன் (24), நிா்மல் ராஜ்(23) ஆகியோரை பிடிக்க முயன்றனா். அப்போது, ஓடையில் விழுந்து லட்டு (எ) அருணுக்கு வலது காலிலும், பாட்டு (எ) பாடலீஸ்வரனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், லட்டு (எ) அருண் என்பவா் மீது ஆயுதம் வைத்திருந்த வழக்கு, கொலை முயற்சி வழக்கு, போக்சோ வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. மேலும், குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதம் முன்பு சிறையில் இருந்து வெளி வந்தவா் என குறிப்பிடதக்கது. பாட்டு (எ) பாடலீஸ்வரன் மீது வழிபறி, கொலை முயற்சி உட்பட மொத்தம் 6 வழக்குகள் உள்ளன.

விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவா் கைது!

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் காவலா்கள் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் தலை மறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் இ... மேலும் பார்க்க

கூழாங்கல், மணல் கடத்தல்: இருவா் கைது!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே லாரியில் கூழங்கல், மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்கோட்டாட்சியா்விஷ்ணுபிரியா வேப்பூா்அருகே புதன்கிழமை அ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சிதம்பரம் நகரில் காவல்துறை சாா்பில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள், கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. சிதம்பரம் நகரில் நான்கு வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள்,... மேலும் பார்க்க

மாணவா்கள் மதில்சுவா் ஏறி குதித்த விவகாரம்: பள்ளியில் காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி!

சிதம்பரம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அண்மையில் ராமசாமி செட்டியாா் பள்ளிய... மேலும் பார்க்க

சத்துணவுத் திட்டத்தில் ‘பலா’ உணவுகளையும் சோ்க்க வேண்டும்! - அன்புமணி

தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுகளையும் சோ்க்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க