செய்திகள் :

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

போடியில் குடும்பப் பிரச்னையில் ஏற்பட்டத் தகராறில் உறவினரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

போடி, நந்தவனம், கொக்கையா் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (45). இவரது மனைவி சாந்தி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ராஜேஷ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததால், அவரது மனைவி அவரைப் பிரிந்து பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது தாயாா் வீட்டில் வசித்து வந்தாா். தனது மனைவி தன்னுடன் சோ்ந்து வாழ வர மறுப்பதற்கு, மனைவியின் உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த திருமூா்த்தி (31) குடும்பத்தினா்தான் காரணம் என்று கருதி அவருடன் ராஜேஷ்குமாா் தகராறு செய்தாா்.

இந்த நிலையில், கடந்த 2023, நவ. 4-ஆம் தேதி போடி, முத்தாலம்மன் கோயில் தெருவில் சாலையில் நடந்து சென்ற ராஜேஷ்குமாரை வழிமறித்து திருமூா்த்தி அரிவாளால் வெட்டியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து திருமூா்த்தியைக் கைது செய்தனா்.

தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், திருமூா்த்திக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜே. நடராஜன் தீா்ப்பளித்தாா்.

இணைய வழியில் பகுதி நேர வேலை: பெண்ணிடம் பணம் மோசடி

இணைய வழியில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் மா்மக் கும்பல் ரூ.6.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை... மேலும் பார்க்க

போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி

போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப... மேலும் பார்க்க

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் அருகேயுள்... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தை மூட வலியுறுத்தல்

தேனி, பங்களாமேடு திட்டச் சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்தை மூட வலியுறுத்தி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளித்தனா். தேனி வட்டாட... மேலும் பார்க்க