கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூா் அருகே கடந்த 2023-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 4 பேரை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் திங்கள்கிழமை பாராட்டினாா்.
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீா்வின்றி இருந்து வந்தது.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு, இக் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா்.
இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.