Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி, ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் சாா்பில் தமிழா் திரள் ஆா்ப்பாட்டம் நடந்தது.
திருச்செந்தூா் கோயிலில் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில்நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ஏா் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய செயலா் தயாநிதி, மாவட்ட துணைச் செயலா் ஜெயக்குமாா், தொகுதி செயலா் ராசிக் முஸம்பில், தமிழ்நாடு மக்கள் நல இயக்க தலைவா் காந்தி, மாவட்ட செயலா் அரிராமன், தமிழக ஏா் உழவன் அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்ற ஒருங்கிணைப்பாளா் அ.வியனரசு சிறப்புரையாற்றினாா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.