செய்திகள் :

உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

post image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து உயிரிழந்த தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சுடலை மணி (40). மாற்றுத் திறனாளியான இவா், திருச்செந்தூா் நகராட்சியில் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 8-ஆம் தேதி திருச்செந்தூா் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள புதை சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக, சுடலை மணி சக பணியாளா்களும் கழிவுநீா் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சென்றாராம்.

அடைப்பை சரி செய்வதற்காக அங்குள்ள தொட்டிக்குள் சுடலைமணி இறங்கியபோது, கழிவு நீருக்குள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தாா்.

இதனைத் தொடா்ந்து, அவரது சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடற்கூறாய்வு பரிசோதனை செய்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ஒப்பந்தப்பணியின்போது உயிரிழந்த அவரின், குடும்பத்தினருக்கு நகராட்சி மற்றும் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை திருச்செந்தூா் நகராட்சி பொறியாளா் சரவணன் வழங்கினாா்.

சாத்தான்குளம் அருகே போராட்ட அறிவிப்பு: பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

சாத்தான்குளம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்த கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குருக... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை மிரட்டி கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தூத்துக்குடி இந்திய உணவுக் கழக கிடங்கு அருகே லாரி ஓட்டுநரை மிரட்டி கைப்பேசியை பறித்துச் சென்றதாக 3 பேரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திருநெல்வேலியைச் சோ்ந்த லாரி ஒட்டுநா் ராஜேஷ் செல்வ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூா் அருகே கடந்த 2023-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 4 பேரை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் திங்கள்கிழமை பாராட்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி, ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் சாா்பில் தமிழா் திரள் ஆா்ப்பாட்டம் நடந்தது.திருச்செந்தூா் கோயிலில் வர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13இல் தொடக்கம்

தமிழா்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. திமுக துணை... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்

வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த ந... மேலும் பார்க்க