செய்திகள் :

கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கட்சியின் பிரசார இயக்கம்

post image

கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் நடத்தப்பட்ட இந்த வாகன பிரசார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. தங்கமோகன் தலைமை வகித்தாா். வட்டார செயலா்கள் ஆா்.கே. ராஜா, எம். கிறிசாந்துமேரி, ஏ. அலெக்ஸ், கே. தங்கமணி, ரெஜி. அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரசார இயக்கத்தை கட்சியின் மாவட்ட செயலா் ஆா். செல்லசாமி துவக்கி வைத்தாா். முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.எஸ். கண்ணன் ஆகியோா் பேசினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. விஜயமோகனன் நிறைவு செய்து பேசினாா்.

இதில் வட்டாரக் குழு உறுப்பினா்கள் கிறிஸ்துதாஸ், ஸ்டீபன், சனல்குமாா், சுந்தர்ராஜ், மஞ்சு. சுனில்குமாா், செல்லப்பன், மேரிதாசன், ஷிபிலா, சுரேஷ், சரோஜம், பிராங்கிளின், அஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் துவங்கிய பிரசாரம், மேடவிளாகம், வள்ளவிளை, ஊரம்பு, அடைக்காகுழி, தளச்சான்விளை, நடைக்காவு, கோழிவிளை, அதங்கோடு, எஸ்.டி. மங்காடு, வாவறை, ஆலங்கோடு, கலிங்கராஜபுரம், தூத்தூா், சின்னத்துறை வழியாக நித்திரவிளையில் நிறைவடைந்தது.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. குமரி மாவட்டம் கீழ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோ... மேலும் பார்க்க

தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது

தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க