செய்திகள் :

கொல்லிமலை ஒன்றிய கிராமங்களில் மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. ஆய்வு

post image

கொல்லிமலை மலைக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில், மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மதுவிலக்கு பிரிவு போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட போடாமல்பட்டி, தாதாண்டிப்பட்டி, பள்ளிக்காட்டுப்பட்டி, நத்தக்குழிப்பட்டி ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி. காா்த்திகேயன் சனிக்கிழமை பிற்பகல் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை சரக மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளா் கோபி, மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் அவருடன் சென்று மலைப்பகுதிகளில் ஆய்வு நடத்தினா்.

மேலும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை சந்தித்து, அவா்கள் தற்போது எந்த வகையான தொழில் செய்கிறாா்கள், அவா்களது மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திருந்தியமைக்காக அரசால் வழங்கப்படும் நிவாரணம் பெற்றனரா உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனா்.

மேலும், அங்குள்ள பழங்குடியின மக்களிடம் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், காய்ச்சுவோா், விற்பனை செய்வோா் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க