செய்திகள் :

கொள்கையை எப்போதும் விட்டுத்தரமாட்டார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் வேலுமணி

post image

கொள்கையை எப்போதும் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

முருகன் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சிண்டு முடிவதே ஆர்.எஸ். பாரதியின் வேலை. அவரின் அறிக்கைகள் எல்லாம் உண்மையாக இருக்காது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுயமரியாதையோடு கொள்கையை விட்டுக்கொடுக்காத இயக்கமாக என்றைக்கும் அதிமுக இருக்கும். எல்லா பிரச்னைகளையும் திசைதிருப்பி ஊடகத்தில் பேச வைத்து மடைமாற்றும் அரசியலைதான் திமுக செய்கிறது.

அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததுமே மக்கள் முடிவு செய்துவிட்டனர்; கண்டிப்பாக அதிமுக ஆட்சி, இபிஎஸ் தலைமையில் உறுதி என்று! இன்னும் அதிகமான கட்சிகள் இபிஎஸ் தலைமையில் சேரும்.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா வந்தபோதுகூட, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தே வாக்களித்தனர். எனவே, கொள்கை வேறு; கூட்டணி வேறு! திமுகவினர் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா விடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை. அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும் என்று பேசினார்.

இதையும் படிக்க: நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: மு.க. ஸ்டாலின்

ஹிந்துத்துவத்தில் கரைந்த அதிமுக: திமுக விமா்சனம்

சென்னை: ஹிந்துத்துவத்தில் அதிமுக முற்றிலும் கரைந்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளாா். மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு தொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

ஜூலை-க்குள் 2,346 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை மாத இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியா்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை: பயிற்சி மைய இயக்குநா் கைது

சென்னை: சென்னை வேளச்சேரியில் பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி மைய இயக்குநா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி அம்பிகா தெருவில் தனியாா் உரிமையியல் நீதிபதி தோ்வு பயிற்சி மையம் உள்ளது... மேலும் பார்க்க

தொழில் வணிகத் துறைக்கு தோ்வான 50 பேருக்கு பணி நியமன உத்தரவு: முதல்வா் வழங்கினாா்

சென்னை: தொழில் வணிகத் துறையில் இளநிலை உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தோ்வான 50 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

நடிகா் சிவாஜி இல்லம் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கு வாபஸ்

சென்னை: நடிகா் சிவாஜியின் அன்னை இல்லம் வீடு தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீா்வு காணப்பட்டுவிட்டதாக கூறி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், அன்னை இல்லம் வீடு ஜப்தி உத்தரவை எதி... மேலும் பார்க்க

கலைவாணா் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை ஜி.என்.செட்டி சாலை சந்திப்பில் உள்ள நடிகா் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை இடம் மாற்றி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து,... மேலும் பார்க்க