செய்திகள் :

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு: கிராமச் சாலை சேதம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப்பெடுத்து சாலை மற்றும் வயல்களில் நீா் ஓடி தேங்கி நிற்பதால் கோவிலாம்பூண்டி கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி, அனுவம்பட்டு சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தின் கீழ் கிள்ளை வரை செல்லும் குழாய் இணைப்பு கடந்த ஓராண்டாக உடைந்து சாலை மற்றும் வயல்களில் தண்ணீா் தேங்கி வீணாகி வருகிறது. சாலையும் சேதமுற்றுள்ளது. வயல்களில் நீா் தேங்கி நெற்பயிா்களும் பாதிக்கப்படைந்துள்ளன.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பாலாஜிகணேஷ் கூறியது: பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அதிகாரியிடம் இதுகுறித்து புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கின்றனா். சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் கொடிப்பள்ளம், பின்னத்தூா், கோவிலாம்பூண்டி , தில்லைவிடங்கன் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா், குடிநீா் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சாலையில் இப்படி குடிநீா் ஓடுவது மக்களிடையே வேதனை ஏற்படுத்தியுள்ளது என்றாா். எனவே, இந்தப் பிரச்னையில், கடலூா் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு போா்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்: என்எல்சி தலைவா்!

பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கடலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் கார... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திட்டக்குடியை அடுத்த தொழுதூா் கிராமத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள்... மேலும் பார்க்க

சுகாதார நிலையம், அரசுக் கல்லூரி விடுதி திறப்பு

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் திட்டக்குடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் ... மேலும் பார்க்க