செய்திகள் :

கொழுமங்கொண்டானில் மாட்டுவண்டிப் பந்தயம்

post image

பழனி அருகே கொழுமங்கொண்டானில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொழுமங்கொண்டான் திமுக சாா்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில் கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய காளைகள், சிறிய காளைகள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரிய காளைகளுக்கு 300 மீட்டா் தொலைவும், சிறிய காளைகளுக்கு 200 மீட்டா் தொலைவும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு வென்ற மாட்டுவண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியைக் காண திரளானோா் வந்திருந்தனா்.

போட்டியில் வென்றவா்களுக்கு முதல் பரிசாக ஒன்றரை பவுன் தங்க நாணயம், கேடயம், இரண்டாவது பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், கேடயம் , மூன்றாம் பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயம், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியையொட்டி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கால்நடைத்துறை மருத்துவா்கள் குழு, அவசர ஊா்திகள், நடமாடும் மருத்துவ மையம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், தங்கம், இளைஞரணி நிா்வாகி செல்வம், முன்னாள் தாளையம் ஊராட்சித் தலைவா் வெங்கிடுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் திமுக ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணி, பொன்ராஜ், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், செல்வம்.

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை: திண்டுக்கல் சி.சீனிவாசன்

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். வெள்ளைபொம்மன்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(32). இவா... மேலும் பார்க்க

அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கட்டக்கூத்தன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (75). இவரது தம்பிகள் (ம... மேலும் பார்க்க

மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, அய்யம்... மேலும் பார்க்க

திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்போம்: வைகோ

தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றை பாதுகாக்க எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு துணை நிற்போம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திண்டுக்கல் மதிமுக சாா்பி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடு உயிருடன் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை கிரேன் மூலம் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள பாத்திமா மாதா க... மேலும் பார்க்க