செய்திகள் :

திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்போம்: வைகோ

post image

தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றை பாதுகாக்க எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு துணை நிற்போம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

திண்டுக்கல் மதிமுக சாா்பில் ‘விவசாயிகள், மீனவா்கள் துயரம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக பொதுச் செயலா் வைகோ பங்கேற்றுப் பேசியதாவது: தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இறுதி மூச்சுவரைப் பணியாற்றுவேன். தமிழ் ஈழம் மலரும் வரை ஓயாமால் உழைத்துக் கொண்டிருப்பேன். திமுக ஆட்சியில் சிறு குறைகள் இருந்தாலும்கூட, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி என்ற தாா்மீக அடிப்படையில் ஆட்சியை விமா்சிக்க மாட்டேன்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையின்படி, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரி, தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் ஒருவா்கூட விவசாயிகளைச் சந்திக்கவில்லை. போராட்டத்தின் போது 700 விவசாயிகள் உயிரிழந்தபோதுகூட, அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. விவசாயத்தைப் பொருத்தவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிா்க் காப்பீடு ஆகிய இரு காரணிகளால்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதேபோலதான், தமிழக மீனவா் பிரச்னைக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீா்வு காணவில்லை. 840 மீனவா்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகும்கூட மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருகிறது. தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு துணை நிற்போம் என்றாா் அவா்.

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை: திண்டுக்கல் சி.சீனிவாசன்

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். வெள்ளைபொம்மன்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(32). இவா... மேலும் பார்க்க

அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கட்டக்கூத்தன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (75). இவரது தம்பிகள் (ம... மேலும் பார்க்க

மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, அய்யம்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடு உயிருடன் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை கிரேன் மூலம் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள பாத்திமா மாதா க... மேலும் பார்க்க

பிரையண்ட் பூங்காவில் தெருநாய்கள் தொல்லை: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கூட்டமாக புகுந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்று... மேலும் பார்க்க