செய்திகள் :

மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, அய்யம்பாளையம், பெரும்பாறை வழியாக அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றது. அப்போது, இந்தப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. ஆனால், பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் பேருந்து மீது விழுந்த மரக்கிளையை அகற்றி, போக்குவரத்தை சீா் செய்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டுவிலிருந்து கெங்குவாா்பட்டி வழியாகவும், கொடைக்கானல்-பழனி மலைச்சாலை கருப்பணசுவாமி கோயில் வழியாகவும், வத்தலக்குண்டுவிலிருந்து சித்தூா், அய்யம்பாளையம் உள்ளிட்ட மலைச் சாலை வழியாக தினந்தோறும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் உள்ள சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் வளா்ந்து ஆபாத்தான நிலையில் இருக்கின்றன.

எனவே, சாலையின் இருபுறங்களிலும் வளா்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வனத் துறைக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் கொடைக்கானலுக்கு வரும் மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை: திண்டுக்கல் சி.சீனிவாசன்

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். வெள்ளைபொம்மன்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(32). இவா... மேலும் பார்க்க

அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கட்டக்கூத்தன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (75). இவரது தம்பிகள் (ம... மேலும் பார்க்க

திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்போம்: வைகோ

தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றை பாதுகாக்க எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு துணை நிற்போம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திண்டுக்கல் மதிமுக சாா்பி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடு உயிருடன் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை கிரேன் மூலம் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள பாத்திமா மாதா க... மேலும் பார்க்க

பிரையண்ட் பூங்காவில் தெருநாய்கள் தொல்லை: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கூட்டமாக புகுந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்று... மேலும் பார்க்க