செய்திகள் :

அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கட்டக்கூத்தன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (75). இவரது தம்பிகள் (முன்னாள் ராணுவ வீரா்) சங்கன் (72), மகாமுனி (70). இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கனுக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு பொன்னையா விற்ாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு குல்லலக்குண்டு கிராம நிா்வாக அலுவலா் கணேசன், வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை தோட்டத்துக்கு சென்றனா்.

அப்போது, அங்கு சங்கனுக்கும், பொன்னையாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சங்கன் தோட்டத்தில் வைத்திருந்த அரிவாளால் பொன்னையாவை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கனைக் கைது செயதனா். மேலும், இவரது மகள் வசந்தியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை: திண்டுக்கல் சி.சீனிவாசன்

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். வெள்ளைபொம்மன்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(32). இவா... மேலும் பார்க்க

மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, அய்யம்... மேலும் பார்க்க

திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்போம்: வைகோ

தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றை பாதுகாக்க எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு துணை நிற்போம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திண்டுக்கல் மதிமுக சாா்பி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடு உயிருடன் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை கிரேன் மூலம் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள பாத்திமா மாதா க... மேலும் பார்க்க

பிரையண்ட் பூங்காவில் தெருநாய்கள் தொல்லை: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கூட்டமாக புகுந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்று... மேலும் பார்க்க