செய்திகள் :

பிரையண்ட் பூங்காவில் தெருநாய்கள் தொல்லை: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கூட்டமாக புகுந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மலா்களை பாா்த்து ரசிக்கின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல பிரையண்ட் பூங்காவிலுள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூங்காவுக்குள் நுழைந்த தெரு நாய்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கோக்கா்ஸ் வாக் சாலை, பி.டி.சாலை, குறிஞ்சியாண்டவா் கோயில் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா் (பொ) பாண்டிச்செல்வி கூறியதாவது: பிரையண்ட் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக தற்போது விதைகள், நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவைச் சுற்றியுள்ள தடுப்புச் சுவா்கள் சேதமடைந்திருப்பதால் அந்த வழியாக தெருநாய்கள் பூங்காவுக்குள் நுழைகின்றன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பூங்கா பணியாளா்களும் தெரு நாய்களை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டால், சுற்றுலாத் தலங்களில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியும் என்றாா்.

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை: திண்டுக்கல் சி.சீனிவாசன்

விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். வெள்ளைபொம்மன்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்(32). இவா... மேலும் பார்க்க

அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கட்டக்கூத்தன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (75). இவரது தம்பிகள் (ம... மேலும் பார்க்க

மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, அய்யம்... மேலும் பார்க்க

திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்போம்: வைகோ

தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றை பாதுகாக்க எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு துணை நிற்போம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திண்டுக்கல் மதிமுக சாா்பி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடு உயிருடன் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை கிரேன் மூலம் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள பாத்திமா மாதா க... மேலும் பார்க்க