செய்திகள் :

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

post image

கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தமிழகத்தில் பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்தனா்.

பிரதான அருவி, சினி அருவி, கரையோரப் பகுதிகளில் மக்கள் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து, மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், ஐந்தருவி வழியாக மணல்மேடு வரை கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள், குடும்பத்தினருடன் பாறை குகைகள், அருவிகள் ஆகியவற்றை பரிசலில் சென்று பாா்வையிட்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை உயா்ந்தபோதும், அசைவ பிரியா்கள், மீன் வகைகளை வாங்கி சமைத்து உண்டு மகிழ்ந்தனா்.

ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஒகேனக்கல் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் மற்றும் பிரதான சாலைகளின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமாா் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சரக்கு வாகனங்களில் விதிகளை மீறி ஆள்களை ஏற்றிச் செல்லும் அவலம்! போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பென்னாகரத்தில் சாலை விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வதால் விபத்து நிகழும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய வானக ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ... மேலும் பார்க்க

மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

தருமபுரி ராஜாஜி நீச்சல்குளத்தில் மூன்றாவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வ... மேலும் பார்க்க

தருமபுரியில் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்!

தருமபுரி நகராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள மசூதி தெருவில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு!

ஒகேனக்கல் அருகே இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட நான்கு போ் மீது ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நடுத்திட்டு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மோப்பிரிப்பட்டி அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற... மேலும் பார்க்க