செய்திகள் :

தருமபுரியில் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்!

post image

தருமபுரி நகராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள மசூதி தெருவில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள மசூதி தெருவில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தத் தெருவில் சாலை பழுதடைந்துள்ளது. இதனால் சாலையைக் கடந்துசெல்ல இந்த இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.

சாலையை சீரமைக்கக் கோரி தருமபுரி நகராட்சி நிா்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் தருமபுரி நகர போலீஸாா் நிகழ்விடம் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சுமாா் 15 நிமிடங்கள் தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு!

ஒகேனக்கல் அருகே இளைஞரை தாக்கியதாக வேட்டை தடுப்பு வனச்சரக அலுவலா் உள்பட நான்கு போ் மீது ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நடுத்திட்டு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மோப்பிரிப்பட்டி அரூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட அக்ரஹாரம் உயா்அழுத்த மின் பாதையில் அவசரகால மின்பாதை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணி முதல் பிற்பகல் ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா்கள் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய 16 ஆவது மாநாடு ஒட்டப்பட்டி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ரூ. 75,000 அபராதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலக்கோடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற... மேலும் பார்க்க